×

சிவகங்கை மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ரூ.4.97 கோடிக்கு தீர்வு

சிவகங்கை, மார்ச் 10: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 297 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் ஆயிரத்து 102 குற்றவியல் வழக்குகள், 252 செக்மோசடி வழக்குகள், 372வங்கிக்கடன் வழக்கு, 335 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 166குடும்ப பிரச்னை வழக்கு, 518 சிவில் வழக்கு என மொத்தம் 2ஆயிரத்து 128வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 122வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.2கோடியே 89லட்சத்து 17ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது.

இதுபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ஆயிரத்து 564வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 175வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2கோடியே 8லட்சத்து 73ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவத்சலு மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர். அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் லோக் அதாலத் ஏற்பாடுகளை செய்தனர்.

 

The post சிவகங்கை மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ரூ.4.97 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Lok Adalat ,Sivaganga district ,National Legal Services Commission ,State Legal Services Commission ,11 People's Courts ,Lok Adalats ,Dinakaran ,
× RELATED வலைத்தள நண்பர்களுடன் தகாத உறவால் கர்ப்பம் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது