×

கரூர் ராயனூர் பகுதியில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி கொண்டுவர வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு

 

கரூர், மார்ச். 8: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாந்தோணிமலைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் பகுதியாக ராயனு£ர் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகளவு உள்ளன. மேலும், கரூரில் இருந்து திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனு£ர் வழியாகவே சென்று வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையமும் ராயனு£ர் பகுதியில்தான் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தளவுக்கு கருர் மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராயனு£ர் உள்ளது.

ஆனால், இந்த சாலையின் வழியாக அதிகளவு பேருந்து வசதிகள் குறைவாக உள்ளதோடு, ஒரு சில ஏடிஎம்களே உள்ளன. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தாந்தோணிமலை, கரூர், காந்திகிராமம் போன்ற பகுதிகளுக்குதான் சென்று வருகின்றனர். எனவே, கரூர் மாநகர பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வரும் ராயனு£ர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியை கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு வங்கி இல்லாத குறையை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கரூர் ராயனூர் பகுதியில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி கொண்டுவர வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Karur Rayanur ,Karur ,Karur Corporation ,Rayanur ,Thanthonimalai ,Dinakaran ,
× RELATED கரூர், ராயனூர் பகுதியில் அரசு வங்கி, ஏடிஎம்.கள் அமைக்க கோரிக்ைக