நிலக்கோட்டை, மார்ச் 8: நிலக்கோட்டை இபி காலனி நாகம்மாள் கோயில் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகள் இனியா (13). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பாத்ரூம் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது பாத்ரூம் கொக்கியில் இனியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.
உடனே பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இனியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் இனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நிலக்கோட்டையில் பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.
