×

மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திருப்புத்தூர், மார்ச் 8: திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் அரசு உதவிபெறும் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா, கல்லூரி தோற்றியோர் விழா மற்றும் கல்லூரி நாள் விழா என முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி குழு துணைத்தலைவர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் 513 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பின்னர் 60வது தோற்றியோர் தினம் மற்றும் கல்லூரி நாள் விழா நடந்தது. கல்லூரி ஆட்சி குழு துணைத்தலைவர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ஆறுமுகராஜன் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் ஜோதிபாசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.கல்லூரி துணை முதல்வர் அழகப்பன் நன்றி கூறினார்.

The post மாணவர்களுக்கு பட்டமளிப்பு appeared first on Dinakaran.

Tags : Graduation ceremony ,Tiruputtur ,Arumugam Pillai Seethai Ammal Government Aided ,College ,College Secretary ,Arumugarajan ,Graduation ceremony for ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: 232 மாணவ மாணவியர் பெற்றனர்