சென்னை :வனவிலங்கு பராமரிப்பு, பாதுகாப்புக்காக 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 8 உதவி கால்நடை மருத்துவர், 6 கால்நடை உதவியாளர், 9 கால்நடை உதவியாளர் பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பராமரிப்பு மையங்களுக்கு உதவவும், தற்போதுள்ள பராமரிப்பு மையங்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கவும் நடவடிக்கை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வனவிலங்கு பராமரிப்பு, பாதுகாப்புக்காக 23 கால்நடை மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை!! appeared first on Dinakaran.