×

பழநி அருகே டூவீலர் மோதி சாலையை கடந்த டிரைவர் பலி

ஒட்டன்சத்திரம், மார்ச் 6: பழநி பாரதி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (55). லாரி டிரைவர். இவர் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு லாரி ஓட்டி வந்தார். வரும் வழியில் சாமியார் புதூர் அருகே, டீ குடிப்பதற்காக சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் இறங்கி சென்று கடையில் டீ குடித்துவிட்டு, லாரியை நோக்கி ராமலிங்கம் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, வீரலப்பட்டியை சேர்ந்த கவிதா (38) என்பவர் டூவீலரில் வந்து சாலையின் குறுக்காக வந்த ராமலிங்கத்தின் மீது மோதினார். இதில், படுகாயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post பழநி அருகே டூவீலர் மோதி சாலையை கடந்த டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Palani ,Ottanchathram ,Ramalingam ,Bharathi Nagar, Palani ,Samiyar Puthur ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை