×

அங்கன்வாடி ஊழியர் தர்ணா போராட்டம்

 

தேனி, மார்ச் 5: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வனிதா முன்னிலை வகித்தார்.

சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபாண்டி கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தின் போது, 1993ல் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், கோடைகால விடுமுறை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி ஊழியர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Theni ,Tamil Nadu Anganwadi Workers and Helpers Association ,Theni District Collector ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா