×

பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் தேரோட்டம் செய்யாறு அருகே பிரமோற்சவ விழா

செய்யாறு, மார்ச் 5: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா அசனமாப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் மயான சூறையும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி கிராம வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அசனமாப்பேட்டை கிராம சமுதாயம் சார்பில் நடந்த விழாவில் அசனமாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

The post பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் தேரோட்டம் செய்யாறு அருகே பிரமோற்சவ விழா appeared first on Dinakaran.

Tags : Amman Tharotam ,Angala ,Parameshwari Amman Temple ,Wembpakkam Taluka Asanamappettai village ,Tiruvannamalai district ,Amman ,Devotation Ceremony ,Amman Devotum in ,
× RELATED முருகன் கோயில் மண்டல பூஜை நிறைவு