மதுரை: 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் இடைக்காலமாக ஜாமின் வழங்க முடியாது, விசாரணை தொடர்ந்து நடத்தி முடிக்கப்படும் என கூறிய நீதிபதி, இடைக்கால ஜாமின் கோரிய நிர்மலா தேவியின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 2024ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
The post பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு!! appeared first on Dinakaran.

