×

2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான ஜெயராம்

சென்னை: தொடர்ந்து கேரக்டர் வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ஜெயராம், மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் உருவாகும் அப்படத்துக்கு ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சீரியஸான ஹீரோ கேரக்டரில் ஜெயராம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பத்திரா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி மலையாள டைரக்டர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

மெடிக்கல் கிரைம் கதை கொண்ட இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, மிதுன் முகுந்தன் இசை அமைக்கிறார். கடைசியாக ஜெயராம், கடந்த 2020ல் மலையாளத்தில் வெளியான ‘மகள்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு 2 வருடங்களாக அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்களில் நம்பி வேடத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள கார்த்தி, ‘நம்பி சார், கெட்டப் சூப்பர்’ என்று கூறியுள்ளார்.

The post 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான ஜெயராம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayaram ,Chennai ,Abraham Osler ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘