×

தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தெலங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழ்த் துரோகமாகும்.

இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

The post தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : ANBUMANI ,Chennai ,Pamaka ,President ,Telangana ,C. ,
× RELATED சொல்லிட்டாங்க…