- வரிச்சிகுடி பிரைமரி ஹெல்த்
- காரைக்கால்
- வரிச்சிகுடி பிரைமரி ஹெல்த்
- காரைக்கல் பாலிடெக்னிக் கல்லூரி
- குஷ்டநோய் ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு
- தின மலர்
காரைக்கால் : வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் மற்றும் வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.நந்தினி ஆகியோர் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி வரிச்சிக்குடி, இராயன்பாளையம் பிரதானச்சாலை, கடைவீதி வழியாக சென்று பாட்கோ காலனி தெருவில் முடிவடைந்தது. இதில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட, தேசிய கேடட் கார்ப்ஸ் கடற்படை மற்றும் ரெட்ரிப்பன் கிளப். மாணவர்கள் கலந்து கொண்டு தொழு நோயை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியபடி சென்றனர்.
முன்னதாக வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.நந்தினி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 30-ம்தேதி தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் புதிய நோயாளிகளைக் கண்டறியும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது.
இது சுவாசக்குழாய் வழியாகப் பரவுகிறது, தோல் மற்றும் நரம்புகளைப் பாதிக்கிறது, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்துத் தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
இதில் சப் லெப்டினன்ட் சீனிவாசன், விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், மருத்துவர் அர்ச்சனா, சித்தா மருத்துவர். தியாகராஜன், ஆய்வாளர்கள் பாலசுந்தரம், கார்த்திகேயன், பரமசிவம், ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மேகநாதன் செய்திருந்தார்.
The post வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.