×

குழந்தை பாதுகாப்பு ஆணையம்.. பதவிகளை நிரப்புக: ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனம் குறித்து ஜூன் 20ம் தேதி அறிக்கை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post குழந்தை பாதுகாப்பு ஆணையம்.. பதவிகளை நிரப்புக: ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Child Protection Commission ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,State Child Protection Commission ,Dinakaran ,
× RELATED சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த...