இலுப்பூர்,பிப்.21: அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்த மினி லாரியை அன்னவாசல் போலீசார் பறிமுதல் செய்தனர். அன்னவாசல் அருகே உள்ள குடுமியாண்மலை சுற்று வட்டார பகுதிகளில் மணல் எடுக்கப்படுவதாக தகவல் கிடைக்க அன்னவாசல் போலீசார் குடுமியாண்மலை – புதுக்கோட்டை சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பிள்ளையப்பட்டி பிரிவு ரோடு அருகே மணல் ஏற்றி வந்த மினி லாரியை சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அன்னவாசல் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.
