×

திருக்கோஷ்டியூர் கோயிலில் மார்ச் 5ல் மாசி தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர், பிப். 21: திருக்கோஷ்டியூர்  சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா மார்ச் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த  சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழாவையொட்டி மார்ச் 4ம் தேதி மாலை சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். மார்ச் 5ம் தேதி காலை 7 மணியளவில் சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருளலும், காலை 9.16 மணிக்கு மேல் 10.26 மணிக்குள் கொடியேற்றமும் நடைபெறுகிறது. தொடர்ந்து பெருமாள், தேவி, பூமாதேவி, பட்டாட்சியருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், இரவு சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவில் தினமும் இரவு சிம்மம், ஹனுமன், தங்க கருடசேவை, தங்க சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி காலை தெப்பக்குளம் அருகே முகூர்த்தக்கால் நடுதலும், மாலையில் சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. 12ம் தேதி இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு, 13ம் தேதி காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு, மதியம் 1 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்

The post திருக்கோஷ்டியூர் கோயிலில் மார்ச் 5ல் மாசி தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Masi Theppa Utsava festival ,Thirukoshiyur temple ,Tiruputtur ,Masi Maha Theppa Utsava festival ,Thirukoshiyur ,Soumiya Narayana Perumal temple ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் கண்மாய்க்குள் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்