×

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பால்பாண்டி (31) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

The post பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Suresh ,Thiruvalluvar Colony, ,Tiruthangal, Sivakasi taluk ,Anaiyur village ,Sivakasi taluk ,Virudhunagar district… ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு