×

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை: குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை; 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு. தேனி, தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

விண்ணப்பதார் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்:

(அல்லது)

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் குழந்தை நலக் குழுவின் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நியமனம் செய்யப்படமட்டாது.

இதற்கான விண்ணப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 28.02.2025 (வெள்ளிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். குழந்தை நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினருக்கான விண்ணப்பம் தனித்தனியாக அனுப்பப்பட வேண்டும்.

இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை.
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

The post குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை: குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Child Welfare and Special Services Department ,Child Welfare Committee ,Chennai ,Child Welfare Committees ,Kanyakumari ,Cuddalore ,Coimbatore ,Erode ,Theni ,Thoothukudi ,Vellore ,Namakkal ,Tiruvannamalai ,Kallakurichi ,Chengalpattu… ,for Child Welfare Committee ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?