×

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.21) வரை அவகாசம்..!!

டெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவி​களுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்​பில் ஆண்டு​தோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்​வுகள் நடத்​தப்​படுகின்றன. முதல்​நிலை, முதன்மை, நேர்​காணல் என மொத்தம் 3 கட்டங்​களாக இத்தேர்​வுகள் நடைபெறும். இதில் தேர்​வர்கள் பெறும் மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் இறுதி முடிவுகள் வெளி​யிடப்​படும்.

இந்நிலை​யில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்பு​வதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்​டது. முதல்​நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு ஜனவரி 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை​யுடன் முடிவடைகிறது. விருப்பம் உள்ள பட்ட​தா​ரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்​தில் விண்ணப்பிக்கலாம். பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்று ​யுபிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

The post சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.21) வரை அவகாசம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Service Primary ,Union Civil Service Selection Board ,UPSC ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...