×

அழுதபடி போட்டோ வெளியிட்ட ரைசா: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர் ரைசா வில்சன். அவ்வப்போது தனது பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் கூட சம்மருக்கு கூல் என்ற கேப்ஷனில் தனது பிகினி படங்களை ரைசா வில்சன் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் ரைசா, தனது இன்ஸ்டாகிராமில் அழுதபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘யாரும் தனியாக இல்லை. ஒவ்வொருவருமே அதையெல்லாம் புரிந்துகொண்டுதான் வருகிறோம். ஆனாலும் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை’ என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ரைசாவுக்கு என்ன ஆனது? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள். ரைசாவுக்கு ஏதோ சோகம் நடந்திருக்கிறது. அதை நம்மிடமிருந்து அவர் மறைக்கிறார் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ ‘ரைசா, மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான், காரணமின்றி அழுதுகொண்டிருக்கிறார்’ என கூறியுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள், ‘எல்லோருக்கும் இதுபோன்ற மனநிலை வருவது சகஜம் தான். இதுவும் கடந்துபோகும். தைரியமாக இருங்கள்’ என்று ரைசாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

The post அழுதபடி போட்டோ வெளியிட்ட ரைசா: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ryza ,Chennai ,Raiza Wilson ,raissa wilson ,sammar ,Cry ,Raissa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...