×

ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டே நடிக்கும் மதுரா

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தனது இசைக்குழுவுடன் வரும் ஜெசி என்ற கேரக்டரில் நடித்தவர், மதுரா. அவர் கூறியதாவது:இந்தப் படத்தில் இலங்கை அகதிகள் பற்றிய கதை என்பதால் நடித்தேன். படப்பிடிப்பில் நடிப்பு குறித்து விஜய் சேதுபதி டிப்ஸ் கொடுத்தார். மறைந்த விவேக்குடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பில் இருந்த பியானோவில், ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘குறுக்கு சிறுத்தவளே’ என்ற பாடலை வாசிக்க கற்றுக்கொடுத்தார். நான் ஜெர்மனிபெர்லின் மாநகரில் பிறந்தேன்.

என் அப்பா ஜெர்மன், அம்மா இலங்கை யாழ்ப்பாண தமிழ்ப்பெண். ஜெர்மனியில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளேன். தமிழில் மேற்படிப்பை முடித்துவிட்டு, ஜெர்மன் பிராங்பர்ட் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்கிறேன். சில இசை வீடியோக்களில் நடித்துள்ளேன். அதன்மூலமாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

The post ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டே நடிக்கும் மதுரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mathura ,Chennai ,Vijay Sethupathi ,Jessie ,London ,Kodaikanal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...