×

அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் பிரம்ம கமலம்

 

ஊட்டி, பிப். 18: நீலகிரி மாவட்டம் அருகே வெஸ்ட்ஓடா பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி, ஷஜனா தம்பதியர். இவர்கள் வீட்டிலேயே சிறு தோட்டம் அமைத்து வண்ண வண்ண பூக்களை வளர்த்து வருகின்றனர். இவர்களது வீட்டுத் தோட்டத்தில் அரிய வகை நிஷா காந்தி எனப்படும் பிரம்ம கமலம் செடிகள் வளர்த்து வருகிறார். அழியும் பட்டியலில் உள்ள இவ்வகை செடிகளை கடந்த பல ஆண்டுகளாக பாதுகாத்து வளர்க்கப்பட்டுள்ள வரும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் தற்போது அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன.

பெரும்பாலும் இவ்வகை மலர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே பூக்கக்கூடிய நிலையில் தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது. தென் அமெரிக்கா நாட்டின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாகக் கொண்ட பிரம்ம கமலம் மலர்கள் இலங்கை நாட்டின் சொர்க்க பூ என அழைக்கப்படுகிறது. மலர்களின் இளவரசி என்றும் அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் ஊட்டியில் உள்ள வீட்டு பூங்காவில் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

The post அரிய வகை இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் பிரம்ம கமலம் appeared first on Dinakaran.

Tags : Antony ,Shajana ,West Oda ,Nilgiris district ,Nisha ,
× RELATED தோழிக்கு லிப் டு லிப்; சானியா லெஸ்பியனா? குவியும் கண்டனம்