தேன்கனிக்கோட்டை, பிப்.18: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சி, காளிகட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி(42). இவரது மனைவி ரோஜாவதியுடன், கடந்த 4ம்தேதி காலை விவசாய கூலி வேலைக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலையில் இருவரும் வீட்டிற்கு வந்த போது, கதவு திறந்து கிடந்தது. அப்போது, வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து மூர்த்தி தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்ஐ நாகராஜ் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், அதே பேகுதியை சேர்ந்த உள்ளீரன் மகன் மல்லேசன்(25) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மல்லேசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The post வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.