சென்னை: கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், இதர பணியாளர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். கல்வி நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் செய்வதற்கு முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயம். பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு கல்வி அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது.
The post கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல் வெளியீடு..! appeared first on Dinakaran.