அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் குப்பை கிடங்கில் தீ விபத்து நடந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள ஏ.ரோட்டில் சிஎம்டிஏவுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து கொட்டிவைக்கின்றனர். நேற்றிரவு குப்பை மேட்டில் தீப்பிடித்து கரும்புகை சூழ்ந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சென்று விசாரித்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா, சிகரெட், பீடி புகைத்துவிட்டு குப்பையில் போட்டதால் தீ ஏற்பட்டதா? என்று விசாரிக்கின்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.