×

துபாய் தொழிலதிபருடன் கீர்த்தி காதல்?

சென்னை: துபாயை சேர்ந்த தொழிலதிபரை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் பின் லியாகத் என்ற தொழிலதிபர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதேபோல் ஃபர்ஹானும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தியுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் துபாய்க்கு சென்றால் இவர் வீட்டில்தான் தங்குவாராம். சிறு வயது முதல் நட்பாக பழகி வந்த இவர்கள், இப்போது காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. இவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எப்போது திருமணம்? என கீர்த்தியை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் கீர்த்தி பதில் சொல்லாமல் நழுவி வருகிறார். அதே சமயம், இவர் நண்பர் மட்டும்தான் என்று கூட கீர்த்தி கூறாமல் இருப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார்.

The post துபாய் தொழிலதிபருடன் கீர்த்தி காதல்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : keerthi ,Chennai ,Kierthi Suresh ,Dubai ,Farhan bin Liyagat ,Kierthi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்