- சபரிமலை ஐயப்பா
- கோவில்
- மாசி மாதம்
- திருவனந்தபுரம்
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- சபரிமலை கோவில்
- மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி
- தந்திரி கண்டார் ராஜீவர்
- சபரிமலை
- ஐயப்பன்
- மாசி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். இரவில் படி பூஜையும் நடைபெறும். வரும் 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
The post மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.
