- சிறுவபுரி முருகன் கோயில்
- திருவள்ளூர்
- கலெக்டர்
- எம். பிரதாப்
- சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- ராஜ்குமார்
- தைப்பூசம்
- சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில்...
- சிறுவாபுரி
- முருகன்
- கோவில்
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் மு,பிரதாப், நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய முருகன் கோயிலில் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகவும் பக்தர்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு ஆய்வு செய்துள்ளோம். குறிப்பாக போக்குவரத்தை சரி செய்து பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், பக்தர்கள் தங்குவதற்கான இடம், ஓய்வு எடுப்பதற்கான இடம், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து தேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து அதன்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதன் காரணமாக கோயில் நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் இணைந்து அவர்களுக்கு உண்டான வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் இங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், தேவைப்பட்டால் தனியார் நிலங்களை வாங்குவதற்கும், கூடுதலாக மினி பேருந்துகளை இயக்குவதற்கும் கூடிய விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இதன் காரணமாக பக்தர்களுக்கு ஒரு சிறப்பான தரிசன அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், ஊத்துக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி சாந்தி, வேலூர் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அனிதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர், வட்டாட்சியர் சிவகுமார், கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களின் அடிப்படை வசதி குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.