×

12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 70,169 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,559 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹4.33 கோடி காணிக்கை ெசலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi Elumalayan Temple ,Swami ,Tirupati ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...