- தஞ்சை மாவட்டம்
- புன்னைநல்லூர்
- மாரியம்மன் கோயில் குடருக்கை ஓட்டி
- தஞ்சை
- தஞ்சை மாவட்டம் பன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
- தஞ்சை வட்டம்
- அரசாங்க தலைவர்
- தஞ்சாவூர்
- மாவட்டம்
- தஞ்சை மாவட்டம் பன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடருக்கை
- தின மலர்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை(பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் 09.02.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், இராமாபுரம் சரகம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் எட்டு திசைகளிலும் காவல்புரியும் அஷ்டசக்திகளுள் கீழ்திசையின்கண் புற்றுருவமாய் நின்று அருள்புரியும் சக்தி ஸ்தலம் என்றும், இத்திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி திருக்குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று தஞ்சாவூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.02.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.