சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய கல்வி நிதியை குஜராத், உ.பி. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்தது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதி ரூ.2152 கோடியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்துள்ளது. ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய கல்வி நிதியை குஜராத், உ.பி. மாநிலங்களுக்கு மாற்றம் செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.