ஊத்தங்கரை, பிப்.7: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள முருகன் கோயிலில், தை மாத கிருத்திகையையொட்டி அதிகாலையில் வள்ளி தெய்வநாயகி, சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதேபோல் சேலம் மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
The post முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு appeared first on Dinakaran.