- உடன்குடி
- சின்னதுரை
- வடக்கு நல்லூர்
- குரும்பூர்
- குலத்துக்கரை
- முத்து தினேஷ் (எ) தீனா
- சொக்கபாலநகரை
- முத்துச்செல்வம்
- சுகுமார்
- தெற்கு நல்லூர்
உடன்குடி, பிப். 5: குரும்பூர் அருகேயுள்ள வடக்கு நல்லூரை சேர்ந்தவர் சின்னத்துரை(48). கூலித்தொழிலாளியான இவர், இங்குள்ள குளத்துக்கரையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சொக்கப்பழங்கரையை சேர்ந்த முத்து தினேஷ்(எ) தீனா(24), முத்துச்செல்வம், தெற்குநல்லூரை சேர்ந்த சுகுமார்(24), மணத்தியை சேர்ந்த செந்தில்குமார்(25) ஆகியோர் சின்னத்துரையிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்யக்கோரி வடக்குநல்லூரை சேர்ந்தவர்கள், குரும்பூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சின்னத்துரையை தாக்கிய முத்துதினேஷ்(எ) தீனா, சுகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். முத்துச்செல்வம், செந்தில்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
The post தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.
