×

தயாரிப்பாளரை பலர் பயமுறுத்தினர்: ‘குட் நைட்’ ஹீரோ மணிகண்டன்

சென்னை: பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், சூர்யாவுடன் நடித்த ‘ஜெய்பீம்’ படத்தில் கதையின் நாயகனாக மாறினார். அடுத்து அவர் ஹீரோவாக நடித்து வெளியான படம், ‘குட் நைட்’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் மணிகண்டன் பேசியதாவது: இப்படத்தின் வெற்றி நேர்மையான விமர்சனங்களுக்குப் பிறகே தீர்மானிக்கப்பட்டது. நல்ல படங்களை உருவாக்கியுள்ளோம் என்பதால் மட்டும் மனநிறைவு ஏற்படாது. அப்படம் தியேட்டரில் வெளியாகி, மக்களின் ஆதரவை எந்தளவுக்குப் பெறுகிறது என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. இப்ப்படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டேன்.

அப்போது தயாரிப்பாளர்களிடம் பலர், ‘மணிகண்டனை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கிறீர்களே. இந்த ரிஸ்க் உங்களுக்கு தேவையா?’ என்று பயமுறுத்தினர். அதற்கு அவர், ‘கதையின் மீதும், மணிகண்டன் மீதும், படக்குழுவினர் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது’ என்றார். எனக்கே என்மீது நம்பிக்கை இல்லாதபோது, என்மீது அதிக நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு விஜய் சேதுபதி அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். அதுபோல் நடிகர் ரமேஷ் திலக் என் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்துகிறார். அவரால் படக்குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவரும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். இந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.

The post தயாரிப்பாளரை பலர் பயமுறுத்தினர்: ‘குட் நைட்’ ஹீரோ மணிகண்டன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manikandan ,CHENNAI ,Suriya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...