×

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

திருச்சி: மணப்பாறை அருகே சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மின் கம்பத்தில் மோதிய பேருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திடீரென தீப்பற்ற தொடங்கியது. பேருந்து விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த புஷ்பம்(62) சிகிச்சை பலனின்றி பலியானார். புஷ்பம் உயிரிழந்த நிலையில் மேலும் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai-Madurai National Highway ,Manapara ,Dinakaran ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...