×

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை டெல்லியில் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடும் குளிரால் 474 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் குளிரால் 474 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது அப்பட்டமான மனித உரிமை மீறலை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission ,Delhi ,NHRC ,Chief Secretary ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...