×

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

சென்னை: நாளை மறுதினம் தமிழகத்திற்கு வருகை தரும் அமித்ஷாவை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார். மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் புகழை அண்மை காலமாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர்கள் மறைக்கிறார்கள். அவரை பற்றி உண்மைக்கு புறம்பான செய்தியை சொல்கிறார்கள். மகாத்மா காந்தியின் புகழை சிர்குலைந்து, அந்த இடத்தில் சவாக்கரை வைப்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம்.

உலகத்தில் மனிதர்கள் உள்ளவரை மகாத்மா காந்தியின் புகழ் நிலைத்திருக்கும்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுதினம் தமிழகத்திற்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை கண்டித்து காங்கிரஸ் நாளை மறுநாள் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவருக்கு எதிராக போராட்டம் தொடரும். எனதெரிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன்,நாசே . ராமசந்திரன், இமயா கக்கன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amitshah ,Chennai ,Amitsha ,Tamil Nadu ,Mahatma Gandhi ,78th Memorial Day ,Sathyamurthi Bhavan ,Chennai, Tamil Nadu ,Congress ,President ,H.E. ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...