×

தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்

சேந்தமங்கலம், ஜன.29: சேந்தமங்கலம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளத்தில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் உள்ள புளிய மரத்தில் மலை தேனீக்கள் கூடுகட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கூட்டில் இருந்து திடீரென தேனீக்கள் கூட்டமாக வெளியேறின. அப்போது அவ்வழியாக சென்ற 15க்கு மேற்பட்டவர்களை துரத்தி துரத்தி கொட்டின. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் துத்திக்குளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி மலைத்தேனீ கூட்டை முற்றிலுமாக அகற்றினர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Selliyamman ,Thuthikulam ,Dinakaran ,
× RELATED மாதேஸ்வரன் எம்பி வீட்டில் தீ விபத்து