பவானி: மைனர் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததால், அவரது கணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.சிவசங்கை மாவட்டம், தேவக்கோட்டையை சேர்ந்தவர் வினோத் (23). பவானியில் தேர் வீதியில் வசிக்கும் இவர், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த உறவினரின் 17 வயது பெண்ணை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்பெண் கர்ப்பம் அடைந்ததால், சொந்த ஊரான தேவக்கோட்டையில் தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.
அங்கு, அப்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆவணங்களை பார்த்தபோது அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிந்தது.இது குறித்து, மருத்துவமனையிலிருந்து மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், தேவக்கோட்டை போலீசார் பவானி அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சிறுமிக்கு ஆண் குழந்தை; வாலிபர் மீது போக்சோ appeared first on Dinakaran.

