×

மணிக்கூண்டு திடலில் துணிகளுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரில் சுதந்திர தின மணிக்கூண்டு திடல் உள்ளது. இந்த திடலுக்கு பின் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அறையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் துணிகள் போட்டு அடுக்கி வைத்திருந்தனர். இந்த துணிகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

மணிக்கூண்டு திடலில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் பின்பகுதியில் மர்ம நபர்கள் இந்த துணிகளை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து நகராட்சி ஊழியர்கள் மூலம் துணிகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணிக்கூண்டு திடலில் துணிகளுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Independence Day ,police station ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாக...