×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர் அலங்காரம்

ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பிரமீடு போன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களையும், கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகள் ஆகியவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள பெரிய புல் மைதானத்தில் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்கின்றனர்.

பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா சிறிய மைதானத்தில் மலர்களால் ஆன பிரமீடு போன்ற மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூங்காவில் மலர்களே இல்லாத நிலையில் இந்த மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Ooty Botanical ,Garden ,Nilgiris district ,Government Botanical Garden ,Ooty… ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பணி