×

உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது : தமிழ்நாடு அரசு

சென்னை : வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தவர்கள் இருவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் “உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. குடிநீர் தொட்டியில் முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் மனிதக்கழிவு கலந்தது கண்டுபிடிப்பு. முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளனர்,”இவ்வாறு அரசு கூறியுள்ளது.

The post உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Vengai field ,Tamil Nadu government ,Chennai ,High Court ,Vengai ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...