கரூர், ஜன. 24: கரூர் மாவட்டம் நெரூர் அக்ரஹாரம் வழியாக செல்லும் வாய்க்காலில் படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் நெரூர் அக்ரஹாரம் பகுதியின் வழியாக வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.
இந்த வாய்க்காலை இந்த பகுதியினர் பயன்படுத்தி வருவதோடு, விவசாயத்துக்கும் முக்கிய பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வாய்க்காலின் இருபுறமும் படிக்கட்டுக்கள் அமைத்து தருவதோடு, பழுதடைந்துள்ள பக்கவாட்டு சுவர்களையும் எழுப்பித் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் செல்லும் வாய்க்காலை பார்வையிட்டு பகுதியினர் நலன் கருதி தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
The post நெரூர் அக்ரஹாரம் வழியாக செல்லும் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.