×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்!!

டெல்லி : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவையும் சேர்த்து விசாரித்து உத்தரவு
பிறப்பிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் தடையாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Governor R. N. ,TAMIL NADU ,RAVI ,Delhi ,Tamil Nadu government ,Supreme Court ,Governor ,Dinakaran ,
× RELATED தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்