தர்மபுரி, ஜன.21: தர்மபுரி டவுன் போலீஸ் எஸ்ஐ பச்சமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்துமேடு மயானம் பகுதியில், ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் சோதனையிட்டனர். இதில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹2 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மாது மகன் ராஜ்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.