- கிருஷ்ணகிரி
- சேட்டு
- நாகனூர்
- பாலக்கோடு
- தர்மபுரி மாவட்டம்
- முருகன் கோயில்
- ஓடையண்டஹள்ளி
- ராயக்கோட்டை-தர்மபுரி சாலை
- கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி, ஜன.21: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (38), கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை – தர்மபுரி சாலையில் ஒடையாண்டஹள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார், அவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சேட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கார் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.