ராசிபுரம், ஜன.21: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்றைய ஏலத்தில் 578 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ₹650க்கும் குறைந்தபட்சமாக ₹570க்கும் விற்பனையானது. மொத்தம் 578 கிலோ பட்டுக்கூடு ₹3.60 லட்சத்திற்கு விற்பனையானது. சராசரியாக கிலோ ₹623க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ராசிபுரத்தில் ₹3.6 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.