நெல்லை, ஜன. 17: நெல்லை- திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில், கடந்த 11ம் தேதி நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் குரும்பூர் அருகே செல்லும்போது 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குரும்பூர் அருகே ரயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.