×

வேதாரண்யம் அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய ரூ.1.50 லட்சம் கஞ்சா மூட்டை-போலீசார் விசாரணை

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மணியன்தீவு கடற்கரைக்கு தெற்கே கோடியக்காடு, முனங்காட்டுக்கு வடக்கு பகுதியில் கடற்கரையோரம் சாக்குமூட்டை ஒதுங்கியிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. கடலோர காவல் குழும டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.இதில் கிழிந்த நிலையில் சாக்கு மூட்டை ஒதுங்கியிருந்ததை கைப்பற்றினர். 2 கிலோ எடை கொண்ட 18 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அதனை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கஞ்சா மூட்டை இலங்கைக்கு கடத்தி செல்லும் போது படகிலிருந்து தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? என விசாரித்து வருகின்றனர்….

The post வேதாரண்யம் அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய ரூ.1.50 லட்சம் கஞ்சா மூட்டை-போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Vedaranayam ,Vedarnaya ,Vetaranyam ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...