×

கடித்த 4 அடி பாம்புடன் மருத்துவமனை வந்த வாலிபர்: நோயாளிகள் அதிர்ச்சி

ராசிபுரம்: தன்னை கடித்த பாம்பை உயிருடன் பிடித்துக்கொண்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவர் நேற்று தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு கடித்தது. எனினும் பதற்றமடையாத ராஜா, தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து எடுத்துக்கொண்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்த நோயாளிகள், உயிருள்ள பாம்புடன் வந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பணியில் இருந்த மருத்துவர்கள் ராஜாவை அழைத்துச்சென்று, அவரை கடித்த பாம்பை பார்த்து, அதன் விஷ தன்மைக்கு ஏற்ப உடனடியாக சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post கடித்த 4 அடி பாம்புடன் மருத்துவமனை வந்த வாலிபர்: நோயாளிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram Government Hospital ,Walliber ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...