திருவனந்தபுரம்: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர், நஸ்ரியா (28). பிறகு ஹீரோயினாக நடித்த அவர், ‘நேரம்’ மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு ரசிகர் களிடம் பிரபலமான அவர், தன்னைவிட 12 வயது அதிகமான மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டார்.
பிறகு கணவரின் சம்மதத்துடன் மீண்டும் நடித்து வரும் அவர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். இந்நிலையில், திடீரென்று விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்தும் பிரேக் எடுத்துக்கொள்கிறேன். இதுதான் நேரம். உங்களின் அன்பையும், குறுஞ்செய்திகளை யும் இனி நான் மிஸ் செய்வேன். மீண்டும் நாம் விரைவில் சந்திப்போம் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
The post சமூக வலைத்தளங்களில் இருந்து நஸ்ரியா திடீர் விலகல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.